வாரத்துக்கு 3,000 பேர் டெங்குவால் பாதிப்பு

by Staff / 19-10-2023 02:30:18pm
வாரத்துக்கு 3,000 பேர் டெங்குவால் பாதிப்பு

வியட்நாமில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் தலைநகர் ஹனோயில் 20,548 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், தாச் தட், ஹோங் மாய் என மற்ற பகுதிகளுக்கும் டெங்கு பரவியது. இதுவரை சுமார் 99,639 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒரு வாரத்துக்கு 3,000 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'குடெங்கா' என்ற தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

 

Tags :

Share via