மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு வைகோ இரங்கல்.

by Editor / 20-10-2023 09:11:17am
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு  வைகோ இரங்கல்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு-வைகோ இரங்கல்.

மேல் மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று (19.10.2023) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள ஆலயத்தின் கருவறையில் பெண்கள் வழிபாடு செய்யும் அமைதிப் புரட்சியை ஆன்மீகத் துறையில் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் பங்காரு அடிகளார்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பள்ளிகள் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் அந்தப் பகுதியில் உள்ள ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்பினை வழங்கி, அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல உதவியது.

ஆதிபராசக்தி சித்தர் பீடம் அந்தப் பகுதியில் அமைந்ததால் கல்வி, சமுதாயம், விவசாயம், வணிகம் என பல துறைகளிலும் முன்னேற்றம் நிலவியது.பங்காரு அடிகளாரின் சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 2019 ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பாராட்டியது.பங்காரு அடிகளாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கும், செவ்வாடை தொண்டர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
 

 

Tags : மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு வைகோ இரங்கல்.

Share via