இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றது கனடா
தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு கனடாவுக்கு இந்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் 41 அதிகாரிகள் கனடாவுக்கு திரும்ப பெறப்பட்டதாக கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை, அவர் ஊடகங்களுக்கு இதனை கூறினார். இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது. கனடாவும் அதே வழியை பின்பற்றினால் என்ன ஆகும். இந்த காரணத்துக்காக நாங்கள் இந்தியாவுக்கு எந்த பதிலடியும் கொடுக்கப் போவதில்லை என குறிப்பிட்டார். இந்தியாவில் கடனாவின் 41 தூதரக அதிகாரிகளும், 42 உதவியாளர்களும் பணியாற்றி வந்த நிலையில், அவர்கள் அனைவருமே திரும்ப பெறப்பட்டுள்ளனர்.
Tags :