குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்

by Staff / 21-10-2023 04:35:29pm
குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்

ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் கிராமம், பெருமாள் கோவில் அருகில் வசித்து வருபவர் மாணிக்கம் இவரது மனைவி கௌசல்யா வயது 25இவர்களுக்கு ஸ்ரீ ரமேஷ் (10), தீபக்குமார் (6) என்ற இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் இன்று காலை மாணிக்கம் மற்றும் அவரது மனைவி கௌசல்யாவிற்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராரில் தனது மகன்கள் ஸ்ரீ ரமேஷ் (10) பொட்டியபுரம் துவக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.தீபக்குமார் (6) பொட்டியபுரம் அரசு துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் தனது இரு மகன்களையும்.அழைத்துக்கொண்டு கௌசல்யா உள்ளிட்ட மூன்று பேரும் அருகிலுள்ள ஜோசியக்காரன் என்பவருடைய கிணற்றில் தற்கொலை செய்ய குதித்துள்ளனர்.சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது இரு குழந்தைகளுடன் ஒரு பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்ட அவர்கள் உடனடியாக கிணற்றில் குதித்து மூவரையும் காப்பாற்றி மேலே கொண்டு வந்தனர் இதில் இரண்டாவது மகன் தீபக்குமார் வயது 6 என்பவர் கிணற்றில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தாய் கௌசல்யா மற்றும் மூத்தமகன் ஸ்ரீ ரமேஷ் ஆகிய இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via