ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 7 பேர் கைது.
மதுரை சிலைமானில் நேற்று முன்தினம் இரவு ஆட்டோ டிரைவர் சங்கு கண்ணன் வீட்டின் அருகே மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை குறித்து அந்தப்பகுதியில் உள்ள சி. சி. டி. வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சங்குகண்ணனை கொலை செய்த கொலையாளிகளின் உருவங்கள் அதில் பதிவாகி இருந்தது.அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் கீழடி சோனையார் கோவில் தெரு அய்யாச்சாமி மகன் முத்து பாலகிருஷ்ணன் (19), அண்ணாநகர் எஸ். எம். பி. காலனி பிச்சைமணி மகன் அருண்குமார் (21), சோனையார் கோவில்தெரு முத்துசாமி மகன் சுபாஸ் சந்திரபோஸ் (23), கண்ணன் மகன் சுதாகர் (21), மேலத்தெரு சிதம்பரம் மகன் வீரமணி (20), சின்ன உடைப்பு ராமன்குளம் பாண்டி மகன் சுதன்ராஜ் (24) மற்றும் 15 வயது சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags :