பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை விழா குறித்து ஆலோசனை 

by Editor / 27-07-2021 07:52:20pm
பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை விழா குறித்து ஆலோசனை 

 

ல்லை  மாவட்டத்தில் பாபநாசம் வனப்பகுதியில்  மிகவும் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவிலில் அமைந்துள்ளது. இங்கு  ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா  வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள்   கலந்து கொள்ளும் இந்த விழாவானது, கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுமா என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. செய்தியாளர்களை சந்தித்து சப் கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆலோசனையின் பேரில் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via