ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசவில்லை- கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்.

by Editor / 25-10-2023 11:47:49pm
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசவில்லை- கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்.

சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்:

ஏற்கனவே வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது இதேபோல் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசினார். கைது செய்யப்பட்ட வினோத் மீது ஏற்கனவே 7 வழக்குகள் உள்ளன.

பெட்ரோல் குண்டு சர்தார் படேல் சாலையில், ஆளுநர் மாளிகை வாயிலுக்கு வெளியே உள்ள பேரிகாட் மீது வீசப்பட்டது.அந்த பாட்டில் வெடிக்கவில்லை. தீயும் பிடிக்கவில்லை. 

யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை,சாலைக்கு எதிர்புறம் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆராய்ச்சி மையத்தின் வெளிப்புறம் இருந்து வினோத் என்பவர் பாட்டிலை வீசவும், அங்கிருந்த காவலர்கள் மடக்கிப் பிடித்தனர்.

குடியரசுத் தலைவர் நாளை வர உள்ள நிலையில், எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்றார்.

 

Tags : ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசவில்லை- கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்

Share via