நிலாவில் மனிதர்கள் குடியேற வாய்ப்பு உள்ளது - இந்திய விண்வெளி ஆராய்ச்சி திரவ இயக்க திட்ட இயக்குனர் வி.நாராயணன்

by Admin / 17-09-2023 08:26:50pm
நிலாவில் மனிதர்கள் குடியேற வாய்ப்பு உள்ளது - இந்திய விண்வெளி ஆராய்ச்சி  திரவ இயக்க திட்ட இயக்குனர் வி.நாராயணன்

நிலாவில் மனிதர்கள் குடியேற வாய்ப்பு உள்ளது என நம்பிகிறேன். இதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன - கோவில்பட்டியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிய பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் திரவ இயக்க திட்ட மையத்தின் இயக்குனர் வி.நாராயணன் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் கல்லூரி நிறுவனர் தின விழாவில் பங்கேற்க வந்த திருவனந்தபுரம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் திரவ இயக்க திட்ட மையத்தின் இயக்குனர், முனைவர் வி.நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

சந்திரயான் - 3- செயற்கை கோளில் புரோபெல்சன் மாடல் (உந்துவிசை தொகுதி), விக்ரம் லேண்டர், ரோவர் ஆகிய 3 பாகங்கள் கொண்டது. இது மொத்தம் 3900 கிலோ எடை கொண்டது. இதில் 6 கருவிகள் உள்ளன. மொத்தம் 4 நாடுகள் நிலாவில் தரையிறங்கி உள்ளன. இந்தியா 4-வது நாடு. ஆனால், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா தான். இது மிகப்பெரிய சாதனையாகும். 

இதனை அனைத்து நாடுகளும் இந்தியாவை வியந்து பார்த்தன. 

தரையிறங்கிய 3 மணி நேரத்துக்கு பின்னர் ரோவரில் பொருத்தப்பட்டிருந்த சோலார் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, தற்போது வரை 100 மீட்டர் வரை பயணம் செய்துள்ளது. இதில், முதல் கண்டுபிடிப்பு நிலாவில் உள்ள தரையில் 60 டிகிரி செ.கி. வெப்பம் உள்ளது. 2-வது நிலாவில் உள்ள பிளாஸ்மா 300 லட்சம் எலக்ட்ரான் ஒரு மீட்டர் க்யூப் வளைவுக்குள் இருக்கிறது. 

3-வது நிலாவில் 6 இடங்களில் அதிர்வு இருக்கிறது கண்டுபிடிக்கப்பட்டது. குரோமியம், சிலிக்கான், சல்பர், டைட்டானியம் உள்ளிட்ட 8 தாது பொருட்கள் இருக்கிறது. 

ஆகவே, சந்திரயான் - 3 திட்டம் என்பது 100 சதவீதம் வெற்றிகரமான திட்டமாகும். இந்த திட்டம் இந்தியர்களை ஒருமைப்படுத்திய ஒரு திட்டம். 2047-ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும். அதற்கு இது தான் முதல் படி. சந்திரயான் -3 திட்டம் இந்தியர்களில் பெருமை சேர்த்த திட்டம். 

கடந்த 2-ம் தேதி லேண்டரை இயந்திரத்தை இயக்கி, 40 மீட்டர் மேலே உயர்த்தி வேறொரு பீடத்தில் வைத்துள்ளது. வருங்காலத்தில் தாது பொருட்களை எடுத்து வருவதற்கு இது பயன்படும். இதுவும் ஒரு வெற்றிகரமான செயலாகும். 

சுதந்திரத்துக்கு பின்னர் ராக்கெட் அனுப்பியது 1967-ம் ஆண்டு தான் அனுப்பினோம். இதனால் மற்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட முடியாது. இந்த 60 ஆண்டுகளில் இந்தியா செய்தது உலகமாக சாதனையாகும். இவையனைத்தும் இந்தியா மக்களுக்கு நன்மைபயக்கும் ஒரு திட்டம்.

சந்திரயான்- 3-ல் நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கியதில் முதல் இடத்தில் உள்ளோம். கடந்த 2008-ல் சந்திரயான் -1 திட்டத்தில் நிலாவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தோம். 

ஒரு வாகனங்கள் 140 செயற்கோள்களை கொண்டு சரியான இடத்துக்கு கொண்டு சென்றது இந்தியா தான். முதன் முதலில் செவ்வாய் கிரகத்துக்கு இறங்கிய நாடு இந்தியா தான். இவையனைத்திலும் இந்தியா முதலிடத்தில் உள்ளோம். நாடுகளும்வெற்றியடைந்துள்ளன ஆனால், அவர்கள் முதல் முறையிலேயே வெற்றி பெறவில்லை. ஆனால், இந்தியா முதன் முறையிலேயே வெற்றி பெற்றுள்ளது. அதிலும், இந்தியா குறைந்த செலவில் ராக்கெட் ஏவி உள்ளோம். நிலாவில் மனிதர்கள் குடியேற வாய்ப்பு உள்ளது என நம்பிகிறேன். இதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

ஆதித்தியா எல் - 1 என்ற செயற்கோள் சூரியனை ஆராய்ச்சி செய்ய அனுப்பி உள்ளோம். இந்த செயற்கோள் 1480 கிலோ எடை கொண்டது. இதில், 7 விஞ்ஞான கருவிகள் உள்ளன. 

இதனை கடந்த 2-ம் தேதி பி.எஸ்.வி. - 57 வாகனத்தில் 19 ஆயிரம் கி.மீ. பயணித்து நீள்வட்ட பாதைக்கு அனுப்பினோம். அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, ஒரு லட்சம் 19 ஆயிரம் கி.மீ. கொண்டு சென்றுள்ளோம். வரும் 19-ம் தேதி காலையில் அங்கிருந்து சூரியனை நோக்கி அனுப்ப வேண்டும். அங்கு சரியான இடத்தில் நிலை நிறுத்த வேண்டும். அது ஜனவரி மாதம் வரை ஆகும். உலகத்தில் சூரியனை ஆராய்ச்சி செய்ய அனுப்பி உள்ள 4-வது நாடாக இந்தியா உள்ளது. அடுத்த மாதம் ககன்யன் திட்டத்தில் மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.அப்போது கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல், கல்லூரி முதல்வர் கே.காளிதாஸ முருகவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

நிலாவில் மனிதர்கள் குடியேற வாய்ப்பு உள்ளது - இந்திய விண்வெளி ஆராய்ச்சி  திரவ இயக்க திட்ட இயக்குனர் வி.நாராயணன்
 

Tags :

Share via