திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை - இபிஎஸ்

by Staff / 28-10-2023 12:10:45pm
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை - இபிஎஸ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை, அரசியல் கட்சி இயக்கங்கள், அதுவும் திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via