முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பானியின் இ-மெயில் முகவரியை கண்டுபிடித்த மர்ம நபர், ரூ.20 கோடி கேட்டு செய்தி அனுப்பியுள்ளார். மேலும், தான் கேட்ட தொகையை தராவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து முகேஷ் அம்பானி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் ஷதாப் கான் என்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :