திமுக ஆட்சியில் வன்முறை தொடர்கிறது - பிரேமலதா
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் NIA விசாரணை வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய அவர், 'திமுக ஆட்சிக்கு வந்தால் வன்முறையை கையில் எடுப்பது வரலாறு. இந்த சம்பவத்தில் திமுக, பாஜக இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிகழ்வு இந்தியாவிற்கே தலை குனிவு' என அவர் விமர்சித்துள்ளார்.
Tags :