பச்சிளம் குழந்தையை கொலை செய்து விட்டு நாடகம் ஆடியதாய்  கைது.

by Editor / 29-10-2023 09:29:39am
 பச்சிளம் குழந்தையை கொலை செய்து விட்டு நாடகம் ஆடியதாய்  கைது.

கம்பம் வ.உ.சி. திடல் அருகில் வசிப்பவர் மணிகண்டன் 24, இவரது மனைவி சினேகா 20, இவருக்கு கடந்த மாதம் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

அக்.21ல் குடுகுடுப்பைகாரர் வீட்டு பக்கம் வந்து சென்றபின் குழந்தையை காணவில்லை என தெற்கு போலீசில் புகார் செய்தார்.காவல்துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கினார்கள்.மேலும் வீட்டிற்குள் சென்று குழந்தை கடத்தல் குறித்து தடயும் ஏதும் கிடைக்கிறதா? என போலீசார் சோதனை செய்தபோதுஅங்கிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் டிரம்பில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் குழந்தை இருந்துள்ளது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்து குழந்தையை சேர்த்தனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கம்பம் தெற்கு காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் பச்சிளம் குழந்தையின் தாயாரான சினேகா குழந்தையை தண்ணீர் ட்ரம்மில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சினேகாவை கைது செய்த போலீசார் கள்ளக்காதலுக்காக கொலை செய்தாரா? அல்லது வறுமையின் காரணமாக கொலை செய்தாரா? என்ற கோணத்தில் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :  பச்சிளம் குழந்தையை கொலை செய்து விட்டு நாடகம் ஆடியதாய்  கைது.

Share via