கேரளா குண்டு வெடிப்பு - நாடு முழுவதும் உஷார் நிலை

by Staff / 30-10-2023 11:30:44am
கேரளா குண்டு வெடிப்பு - நாடு முழுவதும் உஷார் நிலை

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் நேற்று காலை அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி-மும்பை நகரங்கள் உள்பட நாடு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பல தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

Tags :

Share via