24 மணி நேரத்தில் ஊக்கத்தொகை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்

by Staff / 30-10-2023 05:04:02pm
24 மணி நேரத்தில் ஊக்கத்தொகை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.100 கோடி பரிசு தொகையை அரசு இதுவரை வழங்கியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், “இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்கும் அளவில் தமிழக வீரர்கள் விளையாட்டுத் துறையில் பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர். விளையாட்டு போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு, வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் அவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via