சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்த முதல்வர்

by Staff / 31-10-2023 01:54:14pm
சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்த முதல்வர்

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட் (Capitaland) குழுமத்தின் துணை நிறுவனமான ரேடியல் ஐடி பார்க் பிரைவேட் லிமிடெட் நிறுவன சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துவரும் தொழில்நுட்ப பூங்காவில், முதற்கட்ட மாக 1.3 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்கா இன்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, நிறுவன இயக்குநர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via