நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

by Staff / 02-11-2023 05:17:24pm
நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர் பிச்சம்பாளையத்தை அடுத்த கணேஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 30). இவருக்கு திருமணமாகி சந்திரா என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். மனோஜ் அந்த பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில் நேற்று மனோஜ் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via