தமிழ்நாட்டில்தான் ஊழல் அதிகம் - அண்ணாமலை
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஊழல் அதிகமாகியுள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவது குறித்து பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தவறு செய்தததால் புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. சோதனை குறித்து நான் பேசினால், நான் சொல்லித்தான் சோதனை நடப்பதாக கூறுவார்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் அதிக அளவில் ஊழல் நடக்கிறது. தமிழக அமைச்சர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.
Tags :