கொடூரம்.. கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை

by Staff / 04-11-2023 03:30:42pm
கொடூரம்.. கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, 3 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டா மாவட்டத்தை அடுத்துள்ள படவுரா கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சுக்லாவின் மாவு மில்லில் 40 வயது மதிக்கத்தக்க தலித் பெண் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜ்குமார் சுக்லா, அவரது சகோதரர் பவா சுக்லா மற்றும் ராமகிருஷ்ண சுக்லா ஆகிய 3 பேர் சேர்ந்து அப்பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வெறி தீராததால் 3 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via