பாஜக நிர்வாகிகள் 19 பேர் கைது - கொடி கம்பம் பறிமுதல்.

by Staff / 06-11-2023 01:34:40pm
பாஜக நிர்வாகிகள் 19 பேர் கைது - கொடி கம்பம் பறிமுதல்.

எட்டயபுரத்தில் பாஜக கட்சி கொடி கம்பம் அமைக்க முயற்சி - பாஜக நிர்வாகிகள் 19 பேர் கைது - கொடி கம்பம் பறிமுதல் சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே அமைக்கப்பட்ட பாஜக‌கொடி கம்பம் உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி சமீபத்தில் அகற்றப்பட்டது. மேலும் இப்பிரச்சனை தொடர்பாக சில பாஜக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழக முழுவதும் பாஜக கட்சி கொடி கம்பங்கள் நடப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாஜக ஒன்றிய தலைவர் சரவணகுமார் தலைமையில் பாஜகவினர் எட்டயபுரம் நான்கு இடங்களில் கட்சி கொடி கம்பம் அமைத்து கொடியேற்ற முயற்சி செய்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் கட்சி கொடி கம்பம் அமைக்க முயற்சி செய்த பாஜக நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி, பாஜக நிர்வாகிகள் 19 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும் கொடி கம்பத்தையும் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via