தாய் கண்ணெதிரே மிஷினில் சிக்கி குழந்தை பலி

by Staff / 11-01-2023 12:22:42pm
தாய் கண்ணெதிரே மிஷினில் சிக்கி குழந்தை பலி

நாமக்கல் அருகே பரமத்திவேலூர் அருகே நார் மில்லில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாரம்-மனிஷாதேவி தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை தீஷ்குமார். மனிஷாதேவி தனது குழந்தையை மடியில் வைத்து கொண்டே மில்லில் மிஷினில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தீஷ்குமார் ஓடிக்கொண்டிருக்கும் மிஷனின் பெல்ட்டை பிடித்துள்ளான். அப்போது திடீரென குழந்தையை மிஷினுக்குள் இழுத்து சென்றது. இதில் குழந்தை மிஷினில் சிக்கி உடல் நசுங்கியது. அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த நிலையில்,மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

Tags :

Share via