செல்போன் பயன்படுத்துவதை கண்டித்த பெற்றோர். தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர்.

by Editor / 21-07-2023 09:57:36am
செல்போன் பயன்படுத்துவதை கண்டித்த பெற்றோர். தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பெரியமகிபாலன் குளத்தில்  தீ எரிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . ஓட்டப்பிடாரம் போலீசார் அந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தது  வடக்கு பரும்பூரை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (35) என்பது தெரியவந்தது. அதிக நேரம் செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்ததால் , அவரது பெற்றோர்கள் திட்டியதாக இதனால் மணமடைந்த முருகன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via