ரவுடி வெட்டிக்கொலை - குற்றவாளிகளிடம் விசாரணை

by Staff / 07-11-2023 03:20:44pm
ரவுடி வெட்டிக்கொலை - குற்றவாளிகளிடம் விசாரணை

திருக்காட்டுப்பள்ளி அருகே ரவுடியை வெட்டி கொன்ற வழக்கில்  ஈடுபட்ட 6 பேரிடம் திருக்காட்டுப்பள்ளி போலீஸார்  விசாரணையை தொடங்கினர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டி கீழப்படுகை  பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் விஎஸ்எல். குமார் (எ) முருகையன் (50). திருச்சி இரட்டை கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளை தொடர்புள்ள இவர் ரவுடி பட்டியலிலும் இருந்தார். இவரை கடந்த 31ஆம் தேதி இரவு மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்தது. இது குறித்து இறந்த முருகையன்  மனைவி கீதா கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கோயம்புத்தூர் அருகே சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2ம் தேதி பவுசுசெந்தில் (35),   கொடியரசன் (27), பிரவீன் (24), விஜய் (27),   கமல் (24), குமாரவேல் (21) ஆகிய 6 பேரும் சரணடைந்தனர். இந்நிலையில் தோகூர் போலீஸார்6 பேரையும்3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நேற்று திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். திருவையாறு டிஎஸ்பி ராமதாஸ், திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும்  மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் 6 பேரிடமும் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via