15 வயது மாணவியை சீரழித்த 3 மாணவர்கள்

by Staff / 08-11-2023 02:27:06pm
15 வயது மாணவியை சீரழித்த 3 மாணவர்கள்

திருவள்ளூர் அருகே 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி 2 ஆண்டாக சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், கசவநல்லாத்தூரை சேர்ந்த ஆரோக்கியராஜ் (23) என்பவர் 15 வயது மாணவியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதுபற்றி அறிந்த அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுவன் மற்றும் சுகுவனேஸ்வரன் (22) ஆகிய இருவரும் மாணவியை சீரழித்துள்ளனர். இந்நிலையில், மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்படவே அவரை பரிசோதித்த டாக்டர்கள் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரை தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் மாணவனை கைது செய்தனர்.

 

Tags :

Share via