மகளிர் திட்ட உதவி தொகை: முதல்வர் தொடக்கி வைப்பு..

by Staff / 10-11-2023 01:19:04pm
மகளிர் திட்ட உதவி தொகை: முதல்வர் தொடக்கி வைப்பு..

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் எனக்கு தான் மிகுந்த மகிழ்ச்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2-ம் கட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்பு அவர் பேசுகையில், மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் எனக்கு தான் மிகுந்த மகிழ்ச்சி என்றும், தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும், உரிமைத்தொகை சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியாது" என்றார்.

 

Tags :

Share via