குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை 

by Editor / 24-07-2021 07:45:59pm
குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை 

 

தென்காசி மாவட்டம் கடையம் அடுத்துள்ள செக்கடியூர்  நடுதெருவை சேர்ந்தவர் சுரேஷ் .இவருக்கும் தென்காசியை சேர்ந்த கௌரி கனகா வயது 30, என்பவருக்கும் திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன . இவர்களுக்கு கீர்த்தன்  என்ற ஐந்து வயதில் மகனும், 3 வயதில்  இலக்கியா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால்  கோபித்துக்கொண்டு தாய் வீட்டில் இருந்த கனகாவை கடந்த வாரம் தான் சுரேஷ் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.


இந்த நிலையில் இன்று வீட்டில் ஆள் இல்லாத போது தாய் கௌரி கனகா தனது இரண்டு பிள்ளைகள் மீதும் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் . தகவலறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், கடையம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெறுகிறது இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via