பள்ளிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு திடீர் விளக்கம்

by Staff / 20-09-2022 05:11:00pm
பள்ளிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு திடீர் விளக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் வெகு தீவிரமாக பரவி வருகிறது. இதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரியில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதே போல், தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள். மூன்று நாட்களில் சரி ஆகி விடும் காய்ச்சலுக்கு எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியும்? குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால், முதலில் அரசு அதைத் தான் செய்யும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை. விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதற்றத்தை உருவாக்க வேண்டாம்" என்று அவர் கூறினார்.

 

Tags :

Share via