5 மாநில சட்டப்பேரவை தேர்தல்.. ஆயத்தமாகும் கட்சிகள்

by Staff / 30-08-2023 12:59:02pm
5 மாநில சட்டப்பேரவை தேர்தல்.. ஆயத்தமாகும் கட்சிகள்

மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. மிசோரமில் மிசோ தேசிய முன்னணி, சத்தீஸ்கரில் காங்கிரஸ், மத்தியப்பிரதேசத்தில் பாஜக, ராஜஸ்தானின் காங்கிரஸ், தெலங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. வரும் டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. இதனிடையே ஒடிசா மாநிலத்திலும், ஆளும் பிஜு ஜனதா தளம் ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகிறது. ஒடிசாவுக்கு அடுத்த ஆண்டு ஜுன் வரை பதவிக்காலம் உள்ளது.

 

Tags :

Share via