செய்திகள் வெளியிடும் நிறுவனங்களுக்கு கட்டணம் அளிக்க ஃபேஸ்புக் திட்டம்

by Editor / 25-10-2021 06:37:15pm
செய்திகள் வெளியிடும் நிறுவனங்களுக்கு கட்டணம் அளிக்க ஃபேஸ்புக் திட்டம்

 

செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனங்களுக்கும் ஊடகங்களுக்கும் ஏற்கனவே ஒரு சில செயலிகள் கட்டணங்கள் அளித்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் உலகின் நம்பர்-1 சமூக வலைதளமான பேஸ்புக் தனது தளத்தில் செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனங்களுக்கு கட்டணம் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பிரான்சில் ஃபேஸ்புக்கில் வெளியாகும் செய்திகளை வழங்கும் செய்தி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் ஒப்பந்தத்தை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு செய்திக்கும் எவ்வளவு தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
முன்னணி நாளிதழ்கள் சார்பில் செயல்படுத்தப்படும் செய்தி நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்தை ஃபேஸ்புக் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ஃபேஸ்புக்கின் பிரதான தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனங்களுக்கு ஃபேஸ்புக் கட்டணம் வழங்குகிறது.

மேலும் தேர்வு செய்யப்பட்ட செய்தி நிறுவனங்களில் இருந்து வெளியாகும் செய்திகளை பதிவிட ஃபேஸ்புக் புதிதாக பேஸ்புக் நியூஸ் சர்வீஸ் என்று உருவாக்கியுள்ளது.முதல்கட்டமாக இந்த கட்டணம் வழங்கும் முறையை பிரான்ஸ் நாட்டில் அமல்படுத்த உள்ள பேஸ்புக். படிப்படியாக இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் உள்ள செய்தி நிறுவனங்களுக்கும் கட்டணம் வழங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் செய்தி நிறுவனங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

 

 

Tags :

Share via