வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்

by Staff / 09-07-2023 04:51:11pm
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மண்டி மாவட்டத்தில் பியாஸ் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்-பஞ்சார் பகுதிகளை இணைக்கும் பாலம் சமீபத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மாநிலத்தின் சம்பா, காங்க்ரா, குலு, மண்டி, உனா மற்றும் ஹமிர்பூர் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Tags :

Share via