கொட்டி தீர்க்கும் மழை: விமானங்கள் ரத்து

by Staff / 17-04-2024 11:42:48am
கொட்டி தீர்க்கும் மழை: விமானங்கள் ரத்து

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அனைவரும் வீட்டில் இருந்தபடி பணியாற்றும்படியும் பத்திரமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாலேயே இந்த நிலை ஏற்பட்டதாக துபாய் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. கனமழை காரணமாக சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கான 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via