ஓட்டலில் அடுத்தடுத்து வெடித்த எரிவாயு சிலிண்டர்கள்

by Staff / 17-04-2024 12:00:13pm
ஓட்டலில் அடுத்தடுத்து வெடித்த எரிவாயு சிலிண்டர்கள்

சென்னை வடபழனியில் செயல்பட்டு வரும் ஓட்டல் ஒன்றில் 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்து ஏற்பட்டது. இன்று காலையில் ஓட்டல் ஊழியர் சரவணன் அடுப்பை பற்ற வைத்தபோது திடீரென்று 2 சிலிண்டர்கள் வெடித்தன. சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ள நிலையில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via