இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

by Staff / 09-07-2023 04:54:37pm
இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை 3வது நாளாக தொடரும் கனமழையால் ஜம்மு-காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதையடுத்து இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய வானிலை மைய அதிகாரி, ''ஜம்மு-காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்கள் கனமழையால் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதால் இந்த இரு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கவனமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.
 

Tags :

Share via