குடியரசு தின விழா; 24 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி

by Editor / 16-01-2022 04:41:02pm
குடியரசு தின விழா; 24 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி

இந்திய குடியரசு தினவிழா ஜனவரி 26ந்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் விழாவில்ஒரு  லட்சத்திற்கும் மேற்பட்ட  பார்வையாளர்கள் கலந்து கொள்வைத்து வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் பேர் மட்டுமே குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்தாண்டும் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்க உள்ளனர். இதுகுறித்து  அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்தாண்டு குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படும். இதில் 19 ஆயிரம் பேர் மத்திய அரசின் அழைப்பின் அடிப்படையில் பங்கேற்பர். பொதுமக்கள் 5 ஆயிரம் பேர் அனுமதி சீட்டு பெற்று கொண்டு கலந்து கொள்வார்கள். இந்தாண்டு வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிவித்து உள்ளனர்.

 

Tags :

Share via