கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

by Staff / 20-02-2024 02:39:41pm
கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த சத்யம் சுமன் (20) என்ற மாணவர் உள்ளூர் மணிபால் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சனிக்கிழமை தேர்வின் போது இவர் காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது தேர்வு கண்காணிப்பாளர் இவரை கையும் களவுமாக பிடித்து திட்டியுள்ளார். பின்னர் உடனே சுமனை தேர்வு அறைக்கு வெளியே அனுப்பியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த சுமன் கல்லூரி கட்டிடத்தின் மேல் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

 

Tags :

Share via