மனைவி சாவு -4 குழந்தைகளை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை

by Editor / 25-10-2021 06:51:46pm
 மனைவி சாவு -4 குழந்தைகளை  கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை

கர்நாடக மாநிலம், பெலகவி மாவட்டத்தில் உள்ள போரகல் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலா(44). தொழிலாளி இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 பிள்ளைகள் உள்ளனர்.


கோபாலாவின் மனைவி ஜெயா கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கோபாலா மற்றும் பிள்ளைகள் மன அழுத்ததில் இருந்துள்ளனர்.


இந்நிலையில், சம்பவதன்று கோபாலா மற்றும் அவரது சௌமியா , ஸ்வேதா, சாக்ஷி, ஸ்ருஜன் ஆகியோர் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளனர்.தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதனை அடுத்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஜெயா இறந்த துக்கத்தில் குடும்பமே மன அழுத்ததில் இருந்துள்ளது. இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொன்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via