விளையாட்டு விபரீதமானது.. சிறுவன் தூக்குபோட்டு பலி

by Staff / 31-03-2024 12:03:11pm
விளையாட்டு விபரீதமானது.. சிறுவன் தூக்குபோட்டு பலி

திருச்சி வடக்கு தாராநல்லூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் சதீஷ். இவரது மகன் கார்த்திக் (10) தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று கார்த்திக் குளியலறைக்கு குளிக்க சென்ற போது கம்பியில் துண்டால் விளையாட்டாக கழுத்தில் போட்டு தொங்கிப் பார்த்தான். அது எதிர்பாராத விதமாக கழுத்தை இறுக்கி விட்டது. குளிக்க சென்ற மகன் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை என்று கருதி பெற்றோர் குளியலறையை திறந்து பார்த்தபோது கார்த்திக் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது.உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via