நாகை பாஜக தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
இன்று நாகை மாவட்டத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக பாஜகவினர் பட்டாசு வெடித்தனர். இதில் இரண்டு குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த நிலையில் பாஜக தலைவர் கார்த்திகேயன் எரிந்த வீடுகளை பார்வையிட வந்தார். அவரை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். இழப்பீடு தருகிறேன் என எழுதி கொடுத்தால் தான் இந்த இடத்தை விட்டு விலகி செல்வோம் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :