தீர்மானத்தில் உள்ள கவலையை புரிந்து கொள்கிறோம் - தீர்மானம் அவசியமற்றது வானதி சீனிவாசன்

by Staff / 14-02-2024 12:43:05pm
தீர்மானத்தில் உள்ள கவலையை புரிந்து கொள்கிறோம் - தீர்மானம் அவசியமற்றது  வானதி சீனிவாசன்

மாநில உரிமைகள் தொடர்பான உறுப்பினர்களின் கவலையை பாஜக புரிந்து கொண்டுள்ளது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் மீது பேசிய வானதி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சீர்திருத்தம். இதில் உள்ள சாராம்சங்களை புரிந்து கொண்டிருப்பதாகவும், சீர்திருத்தமாக பார்க்க வேண்டும்; ஒரு கட்சி ஆட்சி வந்துவிடுமோ எனக்கருதி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் இந்த தீர்மானம் அவசியமற்றது என பாஜக கருதுகிறது' என்றார்.

 

Tags :

Share via