44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா

by Editor / 09-08-2022 11:53:05pm
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. ஓபன் பிரிவில் இந்திய வீரர் நிகால் சரின் மற்றும் தமிழக வீரர் குகேஷ் ஆகியோர் தங்கம் வென்றனர். அதேபோல், ஓபன் ஆண்கள் பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார். பெண்கள் பிரிவில் தானியா சச்தேவ், திவ்யா  தேஷ்முக்,  வைஷாலி  ஆகியோர்  வெண்கலப் பதக்கம்  வென்றனர். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற  44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நிறைவு  விழாவில்  முதலமைச்ச ர்மு.க. ஸ்டாலின்  இந்தியாவின்  முதல்  கிராண்ட்  மாஸ்டர் தமிழகத்தைச்   சேர்ந்த.  மானுவல் ஆரோனு க்கு  நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா
 

Tags :

Share via