குக்கி எம்எல்ஏக்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

by Staff / 17-08-2023 04:14:35pm
குக்கி எம்எல்ஏக்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மேதி இன மக்கள், தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வந்த நிலையில், மாநிலமே முடங்கி கிடந்தது. இந்நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாஜக ஆதரவு குக்கி இன எம்எல்ஏக்கள் 10 பேர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், 'குக்கி மக்கள் வாழும் 5 மாவட்டங்களில் தலைமைச் செயலாளர், டிஜிபி பதவியை உருவாக்க வேண்டும். மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி வழங்க வேண்டும்' என கூறியுள்ளனர்.

 

Tags :

Share via