குழந்தைக்கு தடுப்பூசியை மாற்றி செலுத்தியதால் அதிர்ச்சி

by Staff / 17-08-2023 04:18:19pm
குழந்தைக்கு தடுப்பூசியை மாற்றி செலுத்தியதால் அதிர்ச்சி

கேரளாவின் பாலக்காடு அருகே பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசியை மாற்றி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு பிராயிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு செவிலியர் தடுப்பூசியை மாற்றி செலுத்தியுள்ளார். குழந்தைக்கு பிஸிஜி தடுப்பூசிக்கு பதிலாக போலியோ மருந்தை செலுத்தியிருக்கிறார். தற்போது குழந்தை பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் உள்ளவர்களின் அலட்சியம் குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு புகார் அளிக்கவுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via