கொரானா பரவல்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.

by Staff / 15-12-2023 03:38:20pm
கொரானா பரவல்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.

அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் கூறியதாவது, சிங்கப்பூர் மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக வைரஸ் பரவி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் பாதிப்பு 230 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. கேரளாவில் நேற்றைய தினம் 1104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டனர். அங்கே பரவி கொண்டிருக்கும் தொற்றின் பாதிப்பு குறித்து கேட்டறிந்த போது, கேரளாவில் பரவிவரும் புதிய வைரஸால் பாதிப்பில்லை என்று அம்மாநில அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.புதிய வைரஸால் பாதிப்பில்லை என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டிய இல்லை. காய்ச்சல் அதிகமுள்ள இடங்களில் ஆர்டிபிசிஆர் சோதனையை அதிகரிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தற்போது எந்த மாதிரியான உருமாற்றம் என ஒரு வாரத்தில் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via