இளைஞரை தாக்கிய 3பேர் கைது..

by Staff / 15-12-2023 03:14:34pm
இளைஞரை தாக்கிய 3பேர் கைது..

சென்னையில் ரூ. 2. 5 லட்சம் காணாமல் போன விவகாரத்தில் இளைஞரை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.தங்கக்கடத்தலில் ஈடுபடும் 2 குருவிகள், கல்லூரி மாணவர் என மொத்தம் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மண்ணடியில் தங்கள் அறையில் இருந்த பணத்தை திருடியதாக கூறி முகமது ஆசிக் (26) என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குருவிகள் முகமது இப்ராகிம் (34), முகமது நஜிமுதீன் (36) மற்றும் கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via