அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

by Staff / 17-08-2023 03:48:49pm
அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு சந்தைப்பேட்டை யில் புதிதாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அடியில் இன்று அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் மல்லப்புரம் பஞ்சாயத்து நல்லாகவுண்டன்பட்டியை சேர்ந்த மனோகரன்(52) என தெரியவந்தது.விவசாய கூலித்தொழி லாளியான இவர் மதுப்பழ க்கத்திற்கு அடிமையானவர். சம்பவத்தன்று சைக்கிளில் சென்றவர் பாலத்திற்கு அடியில் கீழே விழுந்தது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மட்டும் உள்ளார். குழந்தை கள் இல்லை. குடிபோதையில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via