பெற்ற மகனை வெட்டிக்கொன்ற தந்தை
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சொசைட்தி தெருவுல வசித்து வருபவர் ரெங்கன் (56) இவருக்கு மணிகண்டன் (33), பாண்டி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டன் தனது மனைவியை பிரிந்து தனது தந்தையுடன் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மது போதையில் வந்த ரெங்கன், மணிகண்டனுடன் வாய்தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணிகண்டனை ரெங்கன் வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து மணிகண்டன் உடலை மீட்ட போலீசார் ரெங்கனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags :