கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்த நல்லம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கவுண்டம்பாளையம் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கவுண்டம்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் தலைமையில் தகவல் கிடைத்த இடத்தில் திடீர் ஆய்வு செய்தனர். அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 32 வயதான பிரபு என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவைமத்திய சிறையில் அடைத்தனர் என்று கவுண்டம்பாளையம் காவல்துறையினர் இன்று தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :