அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,095 வழக்குகள் பதிவு.

by Editor / 13-11-2023 03:41:38pm
அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,095 வழக்குகள் பதிவு.

தீபாவளி தினமான நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அதிக சத்தத்தை எழுப்பக் கூடிய பட்டாசுகளை வெடித்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

Tags : அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,095 வழக்குகள் பதிவு

Share via

More stories