குழந்தை திருமணம் செய்து வைப்போர் மீது போக்ஸோ சட்டம் பாயும்-அமைச்சர் எச்சரிக்கை.

by Editor / 14-11-2023 09:43:55pm
குழந்தை திருமணம் செய்து வைப்போர் மீது போக்ஸோ சட்டம் பாயும்-அமைச்சர் எச்சரிக்கை.

தமிழகத்தில் 18 வயது பூர்த்தியடையாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்போர் மீது போக்ஸோ சட்டம் பாயும் என்று அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்திருக்கிறார். இதன் மூலமாக குழந்தை திருமணம் தடுக்கப்படும் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு 1098 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. சிறார் திருமணங்களை தடுப்பது நாம் ஒவ்வொருவரின் கடமை ஆகும் . உங்களுக்கு தெரிந்த தகவல்களை அரசிடமோ, காவல் துறையினரிடமோ சொல்லுங்கள். இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன்  கூறியுள்ளார்.

 

Tags : குழந்தை திருமணம் செய்து வைப்போர் மீது போக்ஸோ சட்டம் பாயும்-அமைச்சர் எச்சரிக்கை.

Share via