பூச்சி மருந்தை குடித்து வாலிபர் தற்கொலை

by Staff / 18-11-2023 05:00:54pm
பூச்சி மருந்தை குடித்து வாலிபர் தற்கொலை

நிலக்கோட்டை அருகில் உள்ள எத்திலோடு இந்திரா காலனியை சேர்ந்த சிவா(21). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வின்சியா என்பவரை காதலித்து திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. தீபாவளி தினத்தில் நண்பர்களுடன் சிவா மது அருந்த சென்றார். இதனை மனைவி கண்டிக்கவே மனமுடைந்த சிவா பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று உயிரிழந்தார்.

 

Tags :

Share via