ஆளுநருக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணை

by Staff / 20-11-2023 11:28:02am
ஆளுநருக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணை

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகின்றன. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 10ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், காலவரையின்றி மசோதாக்களை கிடப்பில் போட முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர். அரசியல் சாசனபடி, மசோதாக்கள் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட உடன், ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

 

Tags :

Share via